மருதூர் பேரூர் கழகம் சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி ஏற்றதற்கு கொண்டாட்டம்

Update: 2024-09-29 13:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று பதவி ஏற்றதை தொடர்ந்து மருதூர் பேரூர் கழக திமுக சார்பில் மருதூர் நகர செயலாளர் ரவீந்திரன் ஆணைக்கிணங்க மேட்டுமருதூர் 4 ஆவது வார்டு கிளை பொருளாளர் தங்கதுரை தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் செய்தனர். இந்நிகழ்வில் மருதூர் பேரூர் கழக நான்காவது வார்டு கிளை செயலாளர் முருகானந்தம், நான்காவது வார்டு இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News