கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

ரெட்டியார்சத்திரம் பகுதியில் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

Update: 2024-09-30 05:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காதர் மைதீன் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த ரெட்டியார்சத்திரம், வடக்கு ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் நாகராஜ்(25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News