பெட்டிக்கடையில் மது விற்ற நபர் கைது

சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு

Update: 2024-10-01 09:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் நாகேந்திரன் (34). இவர் தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற சிந்தாமணிப்பட்டி போலீசார் மது விற்ற நாகேந்திரன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News