மாடு மாலை தாண்டும் விழா

கம்புளி நாயக்கன்பட்டியில் பட்டவன் கோவில் திருவிழா

Update: 2024-10-01 15:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பில்லூர் ஊராட்சி கம்புளிநாயக்கன்பட்டியில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு பசாப்புப்பாலையப்பட்டு மந்தையில் பட்டவன் கோவில் உள்ளது. கம்புளிநாயக்கர் வகையரா மற்றும் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட இந்த பட்டவன் கோவில் திருவிழா கடந்த 24.9.2024 வியாழக்கிழமை அன்று பசாப்புப்பாலையப்பட்டு மந்தையில் கம்புளிநாயக்கர் வகையராக்கள் தலைமையிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டது. அன்று முதல் பசாப்புப்பாலையப்பட்டு மந்தையை சேர்ந்த பக்தர்கள் விரதம் இருந்து பட்டவன் சாமிக்கு தினமும் 3 கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து இன்று முதல் நாள் திருவிழாவில் பட்டவன் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வான வேடிக்கையுடன் சிறப்பு பூஜைகள் செய்தனர். நேற்று மாலை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாடுகள் மாழை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 மந்தையர்கள் மாழை தாண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். இவர்களை கம்புளிநாயக்கன்பட்டி பசாப்புப்பாலையப்பட்டு மந்தை சார்பாக வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பட்டவன் கோவில் முன்பாக 14 மந்தைகளின் சலை எருது மாடுகளுக்கு தனித்தனியே புன்னிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை உருமி முழங்க பசாப்புப்பாலையப்பட்டு மந்தை எதிரே சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு சலை எருது மாடுகளை அழைத்து சென்றனர். அங்கு உள்ள எல்லைசாமி கோவிலில் சிறப்பு அபிசேகம் செய்து அனைத்து சலை எருது மாடுகளுக்கும் புன்னிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். அங்கிருந்து பட்டவன் கோவில் முன்பாக அமைக்கப்பட்ட மாத்தால் ஆன எல்லை கோட்டை நோக்கி சுமார் 300 க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது. இதில் கரூர் மாவட்டம் ஆர்டிமலை ஊராட்சி வாலியம்பட்டி கோனதாதா நாயக்கர் மந்தைமாடு முதலாவதாகவும், கரூர் மாவட்டம் கூடலூர் ஊராட்சி பேரூர் தாதல்மாதாநாயக்கர் மந்தை மாடு இரண்டாவதாகவும், 3வது மாடாக திருச்சி மாவட்டம் தொப்பம்பட்டி பிட்டமநாயகர் மந்தை மாடு ஓடி வந்து எல்லை கோட்டை தாண்டியது. அப்போது இவர்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சல் பொடியினை சலை எருது மாடுகள் மீது தூவி வரவேற்று எழும்பிச்சை பழம் வெற்றி பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் மஞ்சல் பொடி வைத்திருந்த 3 கன்னி பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் பட்டவன் கோவிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து நாளை புதன்கிழமை காலை பட்டவனுக்கு பொங்கல் வைத்து படைத்து வழிபாடுகள் செய்கின்றனர். பின்னர் இன்று மாலை தோரணங்கள் அவில்க்கப்பட்டு சாமிக்கு வழி அனுப்பி வைத்து திருவிழாவை முடித்து வைக்கின்றனர். இதில் மந்தா நாயக்கர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News