சாம்சங் நிறுவனத்தில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் வைக்க தடுப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் சாலை மறியல்

இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டமும் சாலை மறிய லும் நடைபெற்றது .

Update: 2024-10-01 17:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இந்திய தொழிற்சங்க மையத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில் தொழிற்சங்க மையத்தினர் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக சாம்சங் நிறுவனத்தையும் தமிழக தொழிலாளர் துறையினரையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.  இந்திய அரசியல் சட்டம் வழங்கி உள்ள உரிமையை உறுதிப்படுத்து,  தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க சட்டங்களுக்கு விரோதமாக செயல்படும் சாம்சங் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடு என முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட20 நபர்களை மயிலாடுதுறை போலீசார்  கைதுசெய்தனர்.

Similar News