விசிக சார்பில் மாவட்ட எஸ்பி இடம் புகார் மனு

கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் தலைமையில் புகார் மனு

Update: 2024-10-04 10:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டத்தில் கனிம வளங்களை கொள்ளை அடிக்கும் கரூர் குணசீலன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று புகார் மனு அளித்தனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் மகாமுனி தலைமையில் புகார் மனு அளித்தனர். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், பொருளாளர்கள் சதீஷ், அவிநாசி, கரூர் தொகுதி செயலாளர் செல்வப் பெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News