விஷ பூச்சி கடித்து பெண் விவசாயி உயிரிழப்பு

குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு

Update: 2024-10-07 03:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்ட குளித்தலை அருகே பணிக்கம்பட்டி பாலம் வடபகுதியைச் சேர்ந்தவர் காத்தாயி (68). இவர் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது ஏதோ பூச்சி கடித்து விட்டதாக கூறியுள்ளார். பணிக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழைத்துச் சென்று பிறகு குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே காத்தாயி உயிரிழந்தார். அதனையடுத்து காத்தாயி மகன் சுந்தரபாண்டியன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு.

Similar News