மகளிர் அணியினருக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கிய விசிக

உளுந்தூர்பேட்டை மாநாடு வெற்றி முன்னிட்டு கொண்டாட்டம்

Update: 2024-10-07 05:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற செய்த மகளிர் அணியினருக்கு கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 13 ஆவது வார்டு கிளையின் சார்பாக கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். நிகழ்ச்சியை கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 13 ஆவது வார்டு கிளைச் செயலாளர் பா.பார்த்திபன் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கிருஷ்ணராயபுரம் பேரூர் செயலாளர் இரா.உதயநிதி முன்னிலை வகித்தார். கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி என்கிற வன்னியரசு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். இந்நிகழ்வில் மகளிர் அணியை சேர்ந்த செ.கோமதி, பெருமாள், கோமதி, சாரதா, சசி, மகா, மாலதி, சரிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News