ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து நிலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒற்றைக் கோரிக்கை வலியுறுத்தி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து நிலை பணியாளர்கள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

Update: 2024-10-08 12:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து நிலை பணியாளர்கள் அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகம் மாவட்டத் செயலாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பாசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த ராஜ சோழன் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் கணக்கர்கள், கணினி வகைப்படுத்துநர்கள், பொறியாளர்கள், அனைத்து நிலை தற்காலிக ஆசிரியர்கள், அனைத்து நிலை பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒற்றைக் கோரிக்கையான செப்டம்பர் மாத ஊதியம் வழங்காததை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News