குத்தாலத்தில் காங்கிரஸ் கட்சியினரின் பாதயாத்திரை

மயிலாடுதுறை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை:- குத்தாலத்தில் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற யாத்திரையில் வழியெங்கும் தேசத்தலைவர்களின் உருவச்சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்

Update: 2024-10-09 03:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்டோபர் 2-ஆம் தேதியில் இருந்து அக்;டோபர் 9-ஆம் தேதிவரை மாவட்டம் முழுவதும் பாத யாத்திரை நடைபெறுகிறது. அந்த வகையில், குத்தாலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேச நலனுக்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து தியாகத் தலைவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இன்று அலங்கரிக்கப்பட்ட வாகனத்துடன் பாதயாத்திரை நடைபெற்றது. காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ தலைமையில் குத்தாலம் அஞ்சாறுவார்த்தலை பகுதியில் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து குத்தாலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குத்தாலம் பேருந்து நிலையம், மாதிரிமங்கலம், திருவாலங்காடு வழியாக சென்று திருவாவடுதுறையில் காமராஜர் சிலை மற்றும் தேசத் தலைவர்கள் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி பாத யாத்திரை நிறைவு பெற்றது. இதில், காங்கிரஸ் மற்றும் திமுக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கதர் குல்லாய் அணிந்து காங்கிரஸ் கொடியை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

Similar News