பொது கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனம் மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்க- இஸ்ரேல் போர் நடவடிக்கையை கண்டித்து மயிலாடுதுறையில் சிபிஐ, சிபிஎம் மற்றும் சிபிஐ-எம்.எல் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2024-10-09 03:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
:- மயிலாடுதுறையில் சிபிஐ, சிபிஎம் மற்றும் சிபிஐ-எம்.எல் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயலாளர் பி‌சீனிவாசன், சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ‌.சீனிவாசன், சிபிஐ-எம்எல் மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீனத்தை தாக்கி அழித்து வரும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை கண்டித்தும், போரில் ஈடுபடாத அப்பாவி பொதுமக்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்வதை நிறுத்த வலியுறுத்தியும், உலகில் போர் பதற்றத்தை உருவாக்கி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் வெறியை கண்டித்தும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்திட ஐநா சபை தலையிட்டு மருத்துவ சிகிச்சை, உணவு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், சுயேச்சையான பாலஸ்தீனம் அமைவதற்கான ஐ.நாவின் தீர்மானத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்க ஆயுதங்களை அனுப்பி வைக்கும் மத்திய அரசை கண்டித்தும் கட்சி நிர்வாகிகள் பலர் பேசினர். இதில் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Similar News