சொத்து தகராறு தகப்பனை வெட்டிகொன்ற மகன் மொளசி அருகே பயங்கரம்

சொத்து தகராறு தகப்பனை வெட்டிகொன்ற மகன் மொளசி அருகே பயங்கரம்

Update: 2024-10-11 08:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு அடுத்த மொளசி வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளையப்பன் 70 விவசாயி இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும் ஜெகநாதன் 49 தாமோதரன் 47 என்கிற இருமகன்களும் ஒரு மகளும்உள்ளனர். இவருக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் நிலம் வெள்ளியம்பாளையத்தில் உள்ளது. இதில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மூத்த மகன் ஜெகநாதன் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் ஒரு மகன்ஆகியோரும் உள்ளனர். தாமோதரனுக்கு திருமணம் ஆகி முதல் மனைவி கோபித்துக் கொண்டு சென்ற நிலையில் இரண்டாவது மனைவி சந்தியா என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு முதல் மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இரண்டாவது மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் என நாலு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தினமும் குடிக்க காசு கேட்டுஇளைய்ப்பனிடம் தகராறு செய்து குடிபோதையில் வந்து இளையப்பனையும் அவரது மனைவியும் தகராறு செய்து அடித்து வந்துள்ளார் காசு கொடுத்து குடிக்க வைத்து அடி வாங்குவதை விட காசு கொடுப்பதை நிறுத்தி விடலாம் என நினைத்து காசு கொடுப்பதை நிறுத்தி இருந்த நிலையில்குடித்துவிட்டு போதையில் வந்த தாமோதரன் குடிக்க காசு கேட்டு தகராறு ஈடுபட்டதோடு இளையப்பன் பேரிலிருந்த சுமார் 50 லட்சம் மதிப்புள்ள 2 1/2 ஏக்கர் நிலத்தை பெண் குழந்தைகளை வைத்து கஷ்டப்படுவதாக கூறி தனக்கே எழுதி கொடுத்து விடும்படி தாமோதரன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு நிலம் குறித்து இளையப்பன் மற்றும் தாமோதரன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. குடிபோதையில் இருந்த தாமோதரன் தனக்கு சொத்து எழுதி வைக்காத ஆத்திரத்தில் கறி வெட்ட பயன்படுத்தும் அரிவாளை எடுத்து இளையப்பனை கழுத்து மற்றும் தலையில் வெட்டியுள்ளார். இதில் ரத்தம் கொட்டி படுகாயம் அடைந்த இளையப்பன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இது குறித்து தகவல் இருந்த மொளசி போலீசார் விரைந்து சென்று இளையப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்துக்காக தகப்பனை வெட்டிய தாமோதரனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News