போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனு
காங்கேயத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக நகரச் செயலாளர் இடம் மனு;
தமிழக சட்டமன்ற கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் பணியில் உள்ளோர் மற்றும் ஓய்வு பெற்றோர் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் வலியுறுத்தி நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் ஒப்படைக்க வேண்டி அவருக்கு பதிலாக திமுக நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பனிடம் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் காங்கேயம் கிளை சி.ஐ.டி.யூ மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் மனு அளித்தனர்.