அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

ஆரணி ரோட்டரி சங்க வளாகத்தி்ல் அரிமா சங்கம், தி.மலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, சங்க இயக்குநர் ஆர்.தினேஷ்பாபு ஆகியோர் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர்.;

Update: 2024-12-15 07:58 GMT
ஆரணி ரோட்டரி சங்க வளாகத்தி்ல் அரிமா சங்கம், தி.மலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, சங்க இயக்குநர் ஆர்.தினேஷ்பாபு ஆகியோர் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர். இதில் அரிமா சங்க தலைவர் மோசஸ் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ஏ,எம்,முருகானந்த், பொருளாளர் கே.ஓ.பரசுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டதுணைஆளுநர் வி.பி.உதயசூரியன், அரிமா சங்க இயக்குநர்கள் பி.நடராஜன், கே.ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இம்முகாமில் 76 பேர் கண் பரிசோதனை செய்தனர். இதில் 10 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 13 பேருக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

Similar News