கல்விக் கொள்கையில் மத்திய அரசின் பார்வை என்பது என்பது ஆர் எஸ் எஸ் பார்வையாக உள்ளது மாணிக்கம் தாகூர் பேட்டி
கல்விக் கொள்கையில் மத்திய அரசின் பார்வை என்பது என்பது ஆர் எஸ் எஸ் பார்வையாக உள்ளது மாணிக்கம் தாகூர் பேட்டி;
ஜனநாயகத்தை காக்க வேண்டிய உள்துறை அமைச்சரே அம்பேத்கரை சிறுமைப்படுத்தியதும் நையாண்டி செய்ததும் அவருடைய மதவாத சிந்தனையை காட்டுகிறது - அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பின் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி காட்டுப்பன்றிகளை மத்திய அரசு வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கினால் மட்டுமே விவசாயிகள் மீது வழக்கு போடுவதை நிறுத்த முடியும் கல்விக் கொள்கையில் மத்திய அரசின் பார்வை என்பது என்பது ஆர் எஸ் எஸ் பார்வையாக உள்ளது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் அதனை சுற்றியுள்ள 26 ஊராட்சிகளில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று நேரில் சென்று நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர், அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் காட்டு பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் சட்டம் அதற்கு எதிராக உள்ளதால் எதுவும் செய்ய முடியாத சூழல் உள்ளது. மத்திய வனத்துறை அமைச்சரிடம் கூறி காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலிலிருந்து நீக்கினால் மட்டுமே விவசாயிகள் மீது வழக்கு போடுவதை நிறுத்த முடியும். ஜனநாயகத்தை காக்க வேண்டிய உள்துறை அமைச்சரே அம்பேத்கரை சிறுமைப்படுத்தியதும் நையாண்டி செய்ததும் கண்டிக்கத்தக்கது. இது அவருடைய மதவாத சிந்தனையை காட்டுகிறது அவருடைய ஆர்எஸ்எஸ் பயிற்சியை காட்டுகிறது. இந்துத்துவ அரசியலை காட்டுகிறது என குற்றம் சாட்டினார் அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை வழியாக செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி ரயிலாக மாற்றுவதற்கு தொடர்ந்து ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர் அது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பாராளுமன்றத்தில் அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் பார்வை அருப்புக்கோட்டையை நிராகரிப்பதாக உள்ளது. அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வருங்காலத்தில் இதற்காக தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரும் இணைந்து ரயில்வே அமைச்சரை சந்திப்போம் என கூறினார். மேலும் எட்டாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆல் பாஸ் என்பதை மத்திய அரசு ரத்து செய்துள்ளது குறித்து செய்தி அவர்கள் கேட்டதற்கு கல்விக் கொள்கையில் மத்திய அரசின் பார்வை என்பது என்பது ஆர் எஸ் எஸ் பார்வையாக உள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் எடுத்த முடிவுகள் அழுத்தத்தின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மத்திய அரசின் கல்விக் கொள்கை என்பது ஆர்எஸ்எஸ் சார்ந்த பார்வையாக இருப்பதை விடுபட வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.