நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளை சட்டமன்ற தொகுதி கூட்டம் மேலப்பாளையம் அலுவலகத்தில் நேற்று (ஜனவரி 22) நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கனி,மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆரிப் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மேலப்பாளையத்தில் குடிப்பதற்கு தரமற்ற நிலையில் இருந்து வரும் குடிநீரை பரிசோதனை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.