தச்சூர், மாமண்டூர் அரசு பள்ளிகளில் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை. ஆரணி எம்.பி தரணிவேந்தன் பங்கேற்பு.

ஆரணி அடுத்த தச்சூர், மாமண்டூர் அரசுப்பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றதில் ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டார்.;

Update: 2025-01-26 08:26 GMT
ஆரணி அடுத்த தச்சூர், மாமண்டூர் அரசுப்பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றதில் ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டார். ஆரணி அடுத்த தச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 கோடியே 53 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மேலும் ஆரணி அடுத்த மாமண்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1 கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டார். மேலும் இதில் தொகுதி செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்டதுணைசெயலாளர் ஜெயராணிரவி, மாவட்டபொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் மாமது, மோகன், சுந்தர், நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, முன்னாள் தச்சூர் ஊராட்சித்தலைவர்கள் குப்பன், வடிவேல், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் தச்சூர் ராஜாபாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News