கட்சிக்கொடி கட்டுவதில் தகராறு செய்தவர் கைது.

உடையார்பாளையம் அருகே கட்சி கொடி கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update: 2025-01-26 12:19 GMT
அரியலூர், ஜன.26- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மூர்த்தியான் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தமிழரசன்(30). தவெக உறுப்பினரான இவர் வீட்டில் கட்சி கொடியை கட்டியுள்ளார். அப்போது தமிழரசனின் அண்ணன் மகேந்திரன் விசிகவில் உள்ளார்.இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த வேல்முருகன்(51) என்பவர் மகேந்திரனிடம் விசிக கொடியை கொடுத்து தவெக கொடி க்கு போட்டியாக அவர்வீட்டில் கட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த தமிழரசன் வேல்முருகனிடம் கேட்டுள்ளார். பின்னர் வேல்முருகன் அவரது மகன் மணிகண்டன்(26) சேர்ந்து தமிழரசனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தமிழரசன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வேல்முருகன் மகன் மணிகண்டனை கைது செய்து செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News