அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம்
அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற்றது.;
அரியலூர், பிப்.7- அரியலூர், உடையார்பாளையம்,செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் சனிக்கிழமை(பிப்.8) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுவிநியோக திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்தது: உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், சம்பந்தப்பட்ட வட்ட அலுவலர் முன்னிலையில் நடைபெறும் இம்முகாமில், கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மேற்பார்வை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.எனவே, இம்முகாமில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை தெரிவித்து பயன்பெறலாம்