தைப்பூசத்தை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற குத்து விளக்கு பூஜை..

தைப்பூசத்தை முன்னிட்டு 50 அடி பிரம்மாண்ட முருகன் சிலை அமையப்பெற்ற ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் குத்துவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது..;

Update: 2025-02-10 14:31 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலில் 99 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த பூஜையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார்கள் இந்த கோவிலில் 50 அடி உயரம் கொண்ட முருகன் சிலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

Similar News