பவானிசாகர் அருகே போக்ஸோ வழக்கில் ஒருவர் கைது
பவானிசாகர் அருகே போக்ஸோ வழக்கில் ஒருவர் கைது;
பவானிசாகர் அருகே போக்ஸோ வழக்கில் ஒருவர் கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (55), கட்டிட தொழிலாளி. இவர் கடைக்கு வந்து 8 வயது சிறுமியிடம், ஆசை வார்த்தை கூறி பேட் டச் செய்தாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணைக்குப் பின் வெள்ளிங்கிரியை கைது செய்து கோபி சிறையில் அடைத்தனர்