மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-02-12 04:28 GMT
கள்ளக்குறிச்சியில் மாற்றுத் திறனாளிகள் நீதி கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் கவிதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மலர் முன்னிலை வகித்தார். தவழும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். அரசு உரிமைகள் திட்டத்தில் 70 சதவீத பணியிடங்களை ஏழை மாற்றுத்திறனாளிக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து, சங்க நிர்வாகிகள் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Similar News