நெய்வேலி வணிக வளாகத்தில் ஆலோசனை
நெய்வேலி வணிக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் நடத்தும் சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டிற்காக கடலூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் கடலூர் மாவட்டம் நெய்வேலி வணிக வளாகத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் கௌரவதலைவர் ஜி.கே.மணி ஆலோசனை வழங்கினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.