குருதி தானம் செய்த நபருக்கு பாராட்டு

குருதி தானம் செய்த அரிமா கனகராசு என்பவருக்கு உதிரும் நண்பர்கள் குழுவினர் பாராட்டு;

Update: 2025-02-23 16:47 GMT
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு பெரம்பலூர் அரிமா க.கனகராசு என்பவர் ஓ - நெகட்டிவ் வகை இரத்தம் கொடை வழங்கி உதவினார். இதனால் அப்பெண்மணியின் கணவர் கோபால் என்பவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வேறு ஒரு பெண்ணிற்கு இரத்தம் கொடை வழங்கி உதவினார். இவர்களின் இந்த செயலுக்கு பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் நா.ஜெயராமன் வாழ்த்துகள் தெரிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ் உடனிருந்தார்.

Similar News