புதிய கிராம அறிவு மையம் கட்டடம் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், முக்குளம் சாத்தனூர் ஊராட்சியில், கருவாக்குறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ரூ.77.89 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கிராம அறிவு மையம் கட்டடம் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி.;
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், முக்குளம் சாத்தனூர் ஊராட்சியில், கருவாக்குறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ரூ.77.89 இலட்சம் மதிப்பீட்டில் 2194.78 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள புதிய கிராம அறிவு மையம் கட்டடம் கட்டுவதற்கு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரிய கழகத்தலைவர் மதிவாணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் அடிக்கல் நாட்டினார்கள்.