ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பாலமுருகன் திருக்கோயிலில் சிறப்பு பூஜை!
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பாலமுருகன் சுவாமி திருக்கோயிலில் இன்று புதன்கிழமை கிருத்திகை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது;
வேலூர் மாவட்டம் எர்த்தாங்கல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பாலமுருகன் சுவாமி திருக்கோயிலில் இன்று புதன்கிழமை கிருத்திகை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.