உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பிங்க்   புடவையில்  மரத்தான் நடத்திய  பெண்கள்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பிங்க்   புடவையில்  மரத்தான் நடத்திய  பெண்கள்;

Update: 2025-03-08 12:23 GMT
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பிங்க்   புடவையில்  மரத்தான் நடத்திய  பெண்கள்... நிகழ்ச்சியை தொடர்ந்து பெண்களுக்கான மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்த நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்... மார்ச் எட்டாம் தேதி ஆன இன்று உலகம் முழுவதும் மங்கையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல்துறை மற்றும் இன்னர் வீல் கிளப் கேத்தி வேலி இணைந்து பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட அரங்கில் இருந்து நடைபெற்ற மாரத்தான் போட்டி முக்கிய வீதிகள் வழியாக 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்று மீண்டும் மேம்பாட்டு அரங்கிற்கு வந்தது இந்த நிகழ்ச்சியில் கண்ணை கவரும் விதமாக பெண்கள் பிங்க் நிற புடவை அணிந்த சேரித்தான் என்னும் நடை போட்டியை நடத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

Similar News