விருத்தாசலம்: பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் வீதியுலா
விருத்தாசலம்: பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் வீதியுலா;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளத்தில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டுமில்லாமல் நாளை 12 ஆம் தேதி மாசி மகம், நாளை மறுநாள் 13 ஆம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது. 14 ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம், வரும் 15 ஆம் தேதி விடையாற்றி உற்சவம் ஆரம்பம், வரும் 24 ஆம் தேதி விடையாற்றி உற்சவம் நிறைவுடன் மாசி மக பெருவிழா நிறைவு பெறுகிறது.