பயணிகள் தாகம் தணிக்குமா அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம்!

பொது பிரச்சனைகள்;

Update: 2025-03-28 04:27 GMT
  • whatsapp icon
அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது நகராட்சி பராமரிப்பில் உள்ள இந்த பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பூ,ர் கோவை, திருச்சி, புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்க்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இங்கு பயணிகளுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பஸ்க்காக காத்திருப்பவர்கள் கடைகளில் விலைக்கு தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டிய நிலை உள்ளது எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News