கானை அழகு நாச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்;

Update: 2025-04-05 02:36 GMT
கானை அழகு நாச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
  • whatsapp icon
காணை அழகு நாச்சி யம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, கடந்த 2ம் தேதி காலை 7:00 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை 8:00 மணிக்கு புனிதநீர் கொண்டு வரப்பட்டு, விநாயகர், பாலசுப்ரமணியர், துர்கா பரமேஸ்வரி, அழகுநாச்சியம்மன் கோவில் கோபுர கலசங்களின் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காணை, விழுப்புரம் சுற்று வட்டார பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News