தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுக்கு இணங்க, குமரி மாவட்டம் தோவாளை தெற்கு ஒன்றியம் செயலாளரும், ஆரல்வாய்மொழி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவருமான சி. முத்துக்குமார் ஏற்பாட்டின் பேரில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை நேற்று முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரளான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.