
சேலம் வீராணம் பகுதியில் உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30). விவசாயி. இவர் அப்பகுதியை சேர்ந்த பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டதால் அவர் மனமுடைந்தார். இதனிடையே கடந்த 2-ந்தேதி அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.