கடலூர்: வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
கடலூர் மாவட்டத்தில் இறைச்சி கடைகள் வெறிச்சோடியது.;
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி கடைகளில் இன்று 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இது குறித்து இறைச்சி கடை வியாபாரிகளிடம் கேட்கையில், இன்று பங்குனி மாத பூசம் என்பதால் இறைச்சி வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்தனர்.