மாடு விடும் திருவிழா கோலாகலம்!
பள்ளிகொண்டாவில் இன்று மாடு விடும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.;

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் இன்று மாடு விடும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் காளைகள் பங்கேற்றன. விழாவில் சிறப்பாக ஓடிய காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.