மீண்டும் இயக்கப்படுமா அரசு பேருந்து : கிராம மக்கள் எதிர்பார்ப்பு
மீண்டும் இயக்கப்படுமா அரசு பேருந்து : கிராம மக்கள் எதிர்பார்ப்பு;
திருவள்ளூர் பேரம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா கிராம மக்கள் எதிர்பார்ப்பு திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் கிராமத்தில் அமைந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை தியாகராய நகர் வண்டலூர் ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கநல்லூர் திருத்தணி ஆந்திர மாநிலம் திருப்பதி கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றப்பட்ட பேருந்துகள் மாநகரப் போக்குவரத்து பேருந்துகள் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டவை மீண்டும் இயக்கப்படாமல் பேரம்பாக்கம் இருளஞ்சேரி பிஞ்சிவாக்கம் கடம்பத்தூர் மப்பேடு கூவம் கொண்டாஞ்சேரி சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக சுங்குவார்சத்திரம் ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் மப்பேடு சென்னை தியாகராய நகர் வண்டலூர் ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அன்றாட வேலைகளுக்கும் மருத்துவ தேவைகளுக்கும் சென்றுவர முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர் மேலும் இப்பகுதியில் இயக்கப்பட்ட மாநகரப் பேருந்துகள் பத்துக்கும் மேற்பட்டவைகள் அடியோடு நிறுத்தப்பட்டதால் வேறு வழியின்றி இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் மட்டுமே பயணித்து வருகின்றனர் முன்னாள் எம்பி ஆக இருந்த கிருஷ்ணசாமி பேரம்பாக்கம் பகுதிக்கு பேருந்து நிலையம் அமைத்துக் கொடுத்ததும் தற்பொழுது வீணாகி வருகிறது அதில் காக்கைகள் கூடு கட்டி வசித்து வருவதுடன் அப்பகுதியில் உள்ள தனியார் கார்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது பேருந்து நிலையத்தை முறையாக பராமரித்து அங்கு நேரக்காப்பாளர் அலுவலகம் அமைத்துக் கொடுப்பதுடன் ஏற்கனவே வண்டலூர் தியாகராய நகர் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் செம்பரம்பாக்கம் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளிமாநிலங்களான திருப்பதி பெங்களூர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் சோளிங்கர் பகுதிகளுக்கு பேருந்து சேவைகளை மீண்டும் இயக்கிட வேண்டும் என்று பேரம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்