பாஜக அரசை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் பாஜக அரசை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
வக்பு வாரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலாளர் பாலையா தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய கௌதமன் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டனக் கோஷங்களை எழுப்பினர்