தூய இம்மானுவேல் ஆலயத்தில் பெண்கள் பண்டிகை!

ஜெபஞானபுரம் தூய இம்மானுவேல் ஆலயத்தில்  சேகர பெண்கள் பண்டிகை நடைபெற்றது. ;

Update: 2025-04-08 14:41 GMT
தூய இம்மானுவேல் ஆலயத்தில் பெண்கள் பண்டிகை!
  • whatsapp icon
ஜெபஞானபுரம் தூய இம்மானுவேல் ஆலயத்தில்  சேகர பெண்கள் பண்டிகை நடைபெற்றது.  தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் தங்கம்மாள்புரம் சேகரத்தை சார்ந்த ஜெபஞானபுரம் சபை தூய இம்மானுவேல் ஆலயத்தில் வைத்து 2025 ஆம் ஆண்டிற்கான சேகர பெண்கள் பண்டிகை நடைபெற்றது. காலை 8 மணிக்கு திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. பேருரணி சேகர ஆயர் ஆமோஸ் திருவிருந்து மற்றும் பண்டிகை ஆராதனையை நடத்தி தேவ செய்தி அளித்தார். பின் தங்கம்மாள்புரம் சேகரத்தைச்சார்ந்த தங்கம்மாள்புரம் ஜெபஞானபுரம், மாயகூத்தபுரத்தை சார்ந்த தாய்மார்கள் பவனி ஊர்வலமாக சென்றனர். இந்த பெண்கள் பண்டிகை சிறப்பு குடுகையில் .சசிலதா அகஸ்டின் கோயில் ராஜ் கலந்து கொண்டு தேவசெய்தி அளித்து மற்றும் ஆலோசனைகளை அளித்தார். சபை சார்பில் சிறப்பு பாடல்களை பெண்கள் பாடினர்.  இந்நிகழ்வில் வேதாகம தேர்வு மற்றும் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வை சாயர்புரம் GUபோப் சபை மன்ற தலைவர் மற்றும் தங்கம்மாள்புரம் சேகர பொறுப்பு ஆயர் அகஸ்டின் கோயில் ராஜ் ஏற்பாடு செய்தார். சபை ஊழியர் சம்பத் மற்றும் ஜெபஞானபுரம் சபையார் உற்சாகமாக பங்குபெற்றார்கள். ஜெபஞானபுரம் தாய்மார்கள் இந்த நிகழ்வை நடத்தினார்கள்.

Similar News