வாகன விபத்தில் வாலிபர் பலி

மதுரை உசிலம்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் வாலிபர் பலியானார்.;

Update: 2025-04-09 05:55 GMT
மதுரை மாவட்டம் பேரையூர் சாணார்பட்டி கிழக்கு தெருவில் வசிக்கும் ஈஸ்வரனின் மகன் தமிழரசன்( 24) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வாகனத்தில் எம் கல்லுப்பட்டி -ஏழுமலை மெயின் ரோட்டில் மல்லாபுரம் ஜங்ஷன் பகுதியில் நேற்று (ஏப்.8) காலை வந்து கொண்டிருந்த பொழுது சாணார்பட்டி சேர்ந்த செல்வகுமார் (41) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் தமிழரசன் வண்டியில் மோதியதில் தமிழரசன் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து எம். கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News