மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
மகிபாலன்பட்டியில் 199 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்;

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட மகிபாலன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 199 பயனாளிகளுக்கு ரூ.55.76 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி மற்றும் அனைத்து துறை அரசு முதல்நிலை அலுவலர்கள், திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம், பொதுமக்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.