சாலை விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலி

சாலை விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலி;

Update: 2025-04-09 12:37 GMT
அச்சரப்பாக்கத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த அரசு பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலி செங்கல்பட்டு மாவட்டம்,மேல்மருவத்தூர் அருகே உள்ள மருவூர் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் போர்ஷி இவர் குரோம்பேட்டை பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் மேல்மருவத்தூரில் இருந்து அச்சரப்பாக்கம் நோக்கி அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கார் அச்சரப்பாக்கம் என்ற இடத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து உள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த அரசு ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தால் இந்த தகவலின் அடிப்படையில் விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்ற அச்சரப்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அச்சரப்பாக்கத்தில் சாலை விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News