அவலுார்பேட்டை முருகன் கோவிலில் கந்த புராண சொற்பொழிவு நடக்கிறது.

பங்குனி உத்திரத்தை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது;

Update: 2025-04-10 05:45 GMT
அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 2 ம்தேதி துவங்கியது. அன்றிலிருந்து 10 நாட்கள் மலை அடிவாரத்தில் தினசரி பிற்பகலில் கந்த புராண சொற்பொழிவு நடக்கிறது. 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை சேலம் சங்கரநாராயணன் சொற்பொழிவு நடந்தது. 7ம் தேதி முதல் திருச்சி சுமதிஸ்ரீ சொற்பொழிவு நடத்தி வருகிறார்.நாளை 11ம் தேதி காலை 10 மணிக்கு புஷ்பரதங்கள் ஊர்வலமும், இரவு சுவாமி திருக்கல்யாணமும், 12 பிற்பகலில் பட்டிமன்றமும், 13 ம் தேதி பிற்பகலில் பட்டிமன்றம், இரவு 8;00 மணிக்கு இன்னிசை கச்சேரியும், இரவு 11;00 மணிக்கு திருத்தெப்பலும், 14ம் தேதி வழக்காடு மன்றம் நடக்கிறது.ஊராட்சி தலைவர் செல்வம், அறங்காவலர் குழு தலைவர் சுதா செல்வம், குழு உறுப்பினர்கள் லதாமுரளி, விவேகானந்தன் மற்றும் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Similar News