நல்லூர் அருகே மலைத் தேனீக்கள் கொட்டியதில் விவசாயி சாவு.
நல்லூர் அருகே மலைத் தேனீக்கள் கொட்டியதில் விவசாயி சாவு போலீசார் விசாரணை.;
பரமத்தி வேலூர், ஏப்.12: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சுந்தராம்பட்டி குட்டை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (71) இவர் தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு திடீரென பறந்து வந்த ஏராளமான மலைத் தேனீக்கள் செல்லப்பனை கடித்ததில் அவர் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர் புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.