
ஆலங்குடி அருகே வெண்ணவால்குடி மலை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இரவு பௌர்ணமி தின சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பௌர்ணமி தினத்தன்று மலை மாரியம்மன் வழிபாடு செய்தால் தங்களின் மாங்கல்யம் பாக்கியம் நிலைக்க வேண்டி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அனைவரும் பங்கேற்று மலை மாரியம்மனை சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.