சிவகங்கை மாவட்டத்தில் குவாரிகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில் குவாரிகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்;
சிவகங்கை மாவட்டத்தில் குவாரி குத்தகை கோரும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சுரங்க நிலுவை தொகை சான்றிதழ் (Mining Dues clearance Certificate) கோரும் விண்ணப்பதாரர்கள் வருகின்ற 28.04.2025 முதல் mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் கனிமங்கள் எடுத்துச் செல்வது கண்டறியப்படின் அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்