பரமத்திவேலூர் அருகே மது விற்றவர் கைது.
பரமத்திவேலூர் அருகே மது விற்றவர் வேலூர் போலீசார் கைது செய்தனர்.;
பரமத்திவேலூர், ஏப்.13: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பொத்தனூர் பஸ் நிறுத்தம் அருகில் ஒருவர் மது பதுக்கி அதிக விலைக்கு விற்பதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒருவர் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொ டர்ந்து மதுவிற்பனை செய்த பொத்தனூர் அரசங்காட்டு தெரு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 50) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.