ஏர் பூட்டும் நிகழ்வில் விவசாயிகள் பங்கேற்பு

மதுரை திருப்பரங்குன்றத்தில் ஏர் பூட்டும் நிகழ்வில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.;

Update: 2025-04-15 02:44 GMT
ஏர் பூட்டும் நிகழ்வில் விவசாயிகள் பங்கேற்பு
  • whatsapp icon
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள கோவில் நிலத்தில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியமாக நடந்து வரும் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சியில் கிராமத்தினர், விவசாயிகள் நேற்று (ஏப்.14) காலை குழந்தைகளுடன் புத்தாடைகள் அணிந்து, புதிய தார் குச்சி நுனியில் ஆணி அடித்து அதில் பூ சுற்றி கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து மலையைச் சுற்றி வந்து நான்கு ஏர்களில் காளைகள் பூட்டி தென்பரங்குன்றத்திலுள்ள கோயில் நிலங்களை உழுதனர். அதனை தொடர்ந்து கல்வெட்டு குகைக் கோயில் முன்பு கிராமத்தினர், ஏழு குளம் பாசன விவசாயிகள் கூட்டம் நடத்தி திருவிழா கொண்டாட்டங்கள், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கான கூலி நிர்ணயம் செய்து ஆலோசனை நடத்தினார்கள். இரவு கிராமத்தினர் சார்பில் கோயிலில் பூஜை நடைபெற்றது.

Similar News