சிறுவன் மயங்கி விழுந்து சாவு போலீசார் விசாரணை
ஈரோட்டில் பரபரப்பு15 வயது சிறுவன் மயங்கி விழுந்து சாவு போலீசார் விசாரணை;

ஈரோடு நேதாஜி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி நித்யா தேவி. இவர்களுக்கு ஸ்ரீ ரூபன்(15), பிரசாந்த் (8) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நித்யதேவி கணவரை விட்டுப் பிரிந்து சென்றார். இந்த நிலையில் ஸ்ரீ ரூபன் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஸ்ரீ ரூபனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் ஸ்ரீ ரூபன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.