கிருஷ்ணகிரி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்.
கிருஷ்ணகிரி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்.;

கிருஷ்ணகிரி மீனாட்சி மஹாலில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சமத்துவ நாள் நிகழ்ச்சியில் 1,699 பயனாளிகளுக்கு ரூ. 13 கோடியே 51 லட்சத்து 45 ஆயிரத்து 665 திப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார். எம்.எல்.ஏ.கள் தே.மதியழகன்(பர்கூர்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), ஆகியோர் நேற்று வழங்கினார்கள். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.கவிதா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் நா.ஷாஜகான், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மரு.மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் தே.ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.