புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அண்ணா நகரைச் சேர்ந்த பாண்டியன் (52) என்பவர் ஆலங்குடி உள்கடை வீதி டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 26 மதுபான பாட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.