ராமநாதபுரம் பாலியல் வழக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை;

Update: 2025-04-19 08:37 GMT
ராமநாதபுரம் மாவட்டம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தைக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் புனித அருளானந்தர் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக இருப்பவர் ஜான்ராபர்ட்(46). இவர் கடந்த 2021 ஜூலை முதல் 2022 ஜூலை வரை தேவாலயத்திற்கு வரும் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. அதனடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் விசாரணை செய்து, மண்டபம் காவல்நிலையத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதனடிப்படையில் 08.08.2022 அன்று பங்குத்தந்தை மீது மண்டபம் போலீஸார் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.கவிதா, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தை ஜான்ராபர்ட்டுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 9 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆர்.எம்.கீதா ஆஜரானார்.

Similar News